தமிழ்நாடு

பள்ளி சிறுமி குறித்து ஆபாச பதிவு - பெண் கைது...

பள்ளி சிறுமி குறித்து ஆபாசமாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த பெண்ணை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி
நடிகர் விஷால் பற்றி ஆபாசமான, அவதூறான கருத்துக்களை யூடியூப் மூலம் பரப்பி பிரபலமானவர் விஸ்வ தர்ஷினி. இவர் கடந்த ஆண்டு இவரது தோழி ஒருவருடன் ஏற்பட்ட தகராறில், தோழியின் பள்ளி செல்லும் குழந்தை குறித்து ஆபாசமான படங்களையும், அவதூறு கருத்துக்களையும் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இது குறித்து சிறுமியின் தாயார் ராயப்பேட்டை மகளிர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டது. சைபர் கிரைம் போலீசார் விஸ்வ தர்ஷினி மீதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் திருச்செங்கோட்டில், பதுங்கியிருந்த விஸ்வ தர்ஷினியை, சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை