தமிழ்நாடு

சிலை கடத்தல் வழக்கு: தேடப்பட்ட புதுச்சேரி பெண் கைது

சிலை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த புதுச்சேரியை சேர்ந்த பெண், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

தந்தி டிவி

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது புதுச்சேரியை சேர்ந்த மரிய தெரசா என்பவர் வந்தார். இவரது ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது 2016ம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனையில் மரிய தெரசா வீட்டில் இருந்து 11 புராதன சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அவரை தேடி வருவதை அறிந்தனர். உடனே மரிய தெரசாவை கைது செய்த போலீஸார், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தந்தனர். இதையடுத்து அங்கு வந்த கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மரிய தெரசாவை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை