தமிழ்நாடு

அஞ்சாமல் மக்கள் பணி செய்பவர்கள்... மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் - கமல்ஹாசன், டிவிட்டர்

மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள், அஞ்சாமல் மக்கள் பணி செய்பவர்கள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள், அஞ்சாமல் மக்கள் பணி செய்பவர்கள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், தேர்தலில் வென்ற மறு நிமிடம் ஆற்று மணல் கொள்ளையைத் துவக்கி விடுவோம் என திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார். தங்களது பெருந்துறை வேட்பாளர் நந்தகுமார் மணல் கொள்ளையை எதிர்த்து நீதிமன்றம் சென்று வாதாடி வென்றவர் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கொலைவெறி தாக்குதலுக்கு ஆளான பின்னும் அஞ்சாமல் மக்கள் பணி செய்பவர் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் என்றும், இது தான் கழகங்களுக்கும் மக்கள் நீதி மய்யத்திற்கும் உள்ள வித்தியாசம் என கூறியுள்ளார்.

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM