தமிழ்நாடு

இந்தியாவுக்கு கடன்பட்டு நிற்கும் பிரிட்டன் ராணுவம்-மத்திய அரசு தலையிடுமா?

தந்தி டிவி

இயந்திர கோளாறால் திருவனந்தபுரத்தில் முடங்கிய பிரிட்டிஷ் போர் விமானமான F35, நாளை புறப்படுகிறது..

கேரள கடல் பகுதி அருகே கடந்த ஜூன் 14ம் தேதி, பிரிட்டிஷ் போர் கப்பலிலிருந்து வானில் பறந்த அந்த போர் விமானம் காலநிலை மோசமானதால் திரும்ப கப்பலில் இறங்க முடியாமல் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. பின்னர் அங்கிருந்து புறப்பட முயன்றபோது இயந்திரக் கோளாறு காரணமாக புறப்பட இயலவில்லை. இந்நிலையில் பிரிட்டனில் இருந்து வரவழைக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுனர்கள் தொழில்நுட்பக் கோளாறை சரி செய்தனர்...

இதையடுத்து பிரிட்டிஷ் போர் விமானம் நாளை புறப்படவுள்ள நிலையில், அதன்பின்னர் தொழில்நுட்பக் குழுவினரும் புறப்படுவர். ஜூன் 14ம் தேதியிலிருந்து விமானம் திருவனந்தபுரத்தில் நிறுத்தப்பட்டதற்கான வாடகை அதானி நிறுவனத்திற்கும், ஹேங்கரில் நிறுத்தப்பட்டு சரி செய்ததற்கான கட்டணம் ஏர் இந்தியாவுக்கும் பிரிட்டன் அரசு வழங்க வேண்டும். மத்திய அரசு தலையிட்டால் வாடகை கட்டணம் குறைய வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு