#2026tnelection #anbilmahesh #12thexams பொதுத்தேர்வுகளை சுமூகமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தயார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் பொதுத் தேர்வை சுமூகமாக நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக, அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மார்ச் முதல் வாரம் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆண்டு முதல் மாணவர்கள் கால்குலேட்டர் பயன்படுத்தலாம் எனவும், சட்டமன்ற தேர்தலால் பொதுத்தேர்வுகளுக்கு எந்த இடையூறும் இல்லை எனவும் கூறினார்.