தமிழ்நாடு

கேரளாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு விசிட் கெத்தாக வலம் வரும் காட்டு யானைகள்..பயத்தில் பொதுமக்கள்

தந்தி டிவி

கோவை மாவட்டம் வால்பாறையில் காட்டு யானைகள் குட்டிகளுடன் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வால்பாறையில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருவதால், கேரள மாநிலம் சாலக்குடியில் இருந்து காட்டு யானைகள் கூட்டமாக இடம் பெயர்ந்துள்ளன. வால்பாறை அருகில் உள்ள கெஜமுடி எஸ்டேட், தாய்முடி எஸ்டேட் பகுதிகளில் யானைகள் சுற்றித் திரிந்ததால், தேயிலை பறிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து தாய்முடி எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ள வனத்துறையினர், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நுழைந்து விடாதவாறு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்