கோவை, வெள்ளியங்கிரி கோவிலுக்கு சென்று திரும்பிய பக்தர்களை ஒற்றை காட்டு யானை விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள பூண்டி ஆண்டவர் கோயிலில் வழிபாடு நடத்தி விட்டு பைக்கில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது, பக்தர்களை ஒற்றைக்காட்டு யானை வழிமறித்துள்ளது... யானையிடம் சிக்கிய பக்தர், தனது பைக்கை அங்கேயே போட்டுவிட்டு உயிருக்கு பயந்து ஓட்டம் பிடித்துள்ளார். தொடர்ந்து, அந்த பைக்கை காட்டு யானை தனது காலால் சேதப்படுத்திவிட்டு சென்றது..