தமிழ்நாடு

ஆக்ரோஷமாக விரட்டிய காட்டு யானை...அதிர்ஷ்டவசமாக தப்பிய வனத்துறையினர்

பொள்ளாச்சி அருகே நவமலை பகுதியில் வனத்துறையினர் வாகனத்தை, காட்டுயானை துரத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

தந்தி டிவி
பொள்ளாச்சி அருகே நவமலை பகுதியில் வனத்துறையினர் வாகனத்தை, காட்டுயானை துரத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. பொள்ளாச்சி அருகே நவமலையில் கூலித்தொழிலாளி மற்றும் பள்ளி மாணவி என இரண்டு பேரை ஒற்றை காட்டுயானை ஒன்று மிதித்து கொன்றதை தொடர்ந்து அங்கு வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், ஆழியாறில் இருந்து நவமலை செல்லும் பகுதியில் வனத்துறையினர் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஒற்றை காட்டுயானை அவர்களது வாகனத்தை ஆக்ரோஷமாக துரத்தியது. வேகமாக காரை பின்னோக்கி இயக்கியதால், வனத்துறையினர் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளனர். இந்த காட்சிகளை, வனத்துறை வீர‌ர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு