தமிழ்நாடு

ஆக்ரோஷமாக விரட்டிய காட்டு யானை...அதிர்ஷ்டவசமாக தப்பிய வனத்துறையினர்

பொள்ளாச்சி அருகே நவமலை பகுதியில் வனத்துறையினர் வாகனத்தை, காட்டுயானை துரத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

தந்தி டிவி
பொள்ளாச்சி அருகே நவமலை பகுதியில் வனத்துறையினர் வாகனத்தை, காட்டுயானை துரத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. பொள்ளாச்சி அருகே நவமலையில் கூலித்தொழிலாளி மற்றும் பள்ளி மாணவி என இரண்டு பேரை ஒற்றை காட்டுயானை ஒன்று மிதித்து கொன்றதை தொடர்ந்து அங்கு வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், ஆழியாறில் இருந்து நவமலை செல்லும் பகுதியில் வனத்துறையினர் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஒற்றை காட்டுயானை அவர்களது வாகனத்தை ஆக்ரோஷமாக துரத்தியது. வேகமாக காரை பின்னோக்கி இயக்கியதால், வனத்துறையினர் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளனர். இந்த காட்சிகளை, வனத்துறை வீர‌ர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’