தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்த காட்டுப்பன்றியை வனத்துறையினர் சுட்டுக்கொன்றனர். மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன் உத்தரவின் பேரில் வனச்சரகர் ஆறுமுகம் தலைமையிலான வனத்துறையினர் காட்டுப்பன்றியை சுட்டுக்கொன்ற நிலையில் அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினரை பாராட்டி வருகின்றனர்.