தமிழ்நாடு

தேர்வில் பிட் அடித்த மனைவி.. கணவரான போலீஸ் SI கைது..

தந்தி டிவி

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வில் முறைகேடு செய்த காவல் உதவி ஆய்வாளர், அவரது மனைவி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல் உதவி ஆய்வாளர் தேர்வு, கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்றது. திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற தேர்வின்போது, காவல் உதவி ஆய்வாளர் சுமன் என்பவரின் மனைவி லாவண்யா என்பவர் தேர்வில் பங்கேற்று எழுதினார். அப்போது, கேள்வித்தாளை செல்போன் மூலம் படம் எடுத்து, வெளியில் அனுப்பி விடையை கேட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் லாவயண்யா தேர்வில் காபி அடித்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், காபி அடிக்கப்பட்டது உறுதியானதை அடுத்து, தேர்வு எழுதிய லாவண்யா, அவரது கணவர் காவல் உதவி ஆய்வாளர் சுமன் மற்றும் அவலூர்பேட்டை காவல் நிலைய உதவி பயிற்சி ஆய்வாளர் சிவக்குமார்,செங்கம் பகுதியை சேர்ந்த மருத்துவ பிரவீன் ஆகிய 4 ரை போலீசார் கைது செய்தனர்.

Union Budget 2026 | "இந்த பட்ஜெட்ல தமிழ்நாட்டுக்கு நிறைய..." - முக்கிய புள்ளி கொடுத்த அப்டேட்

Union Budget 2026 | Nirmala Sitharaman | "இன்னும் 5 ஆண்டுகளில்" மிரட்டலான அறிவிப்புகள்

மத்திய பட்ஜெட் நொடிக்கு நொடி அப்டேட்ஸ்

Budget 2026 Tamil | பட்ஜெட்டில் `சென்னைக்கு’ இன்ப அதிர்ச்சி அறிவிப்பு

Union Budget 2026 | தமிழகத்திற்கு வரும் முக்கிய மையம்.... மேசையை தட்டி வாழ்த்திய பிரதமர்