தமிழ்நாடு

கணவரை உயிருடன் புதைத்த மனைவி - கணவர் சொன்னதை தான் செய்ததாக வாக்குமூலம்

கணவரை உயிருடன் புதைத்த மனைவி - கணவர் சொன்னதை தான் செய்ததாக வாக்குமூலம்

தந்தி டிவி

கணவரை உயிருடன் புதைத்த மனைவி - கணவர் சொன்னதை தான் செய்ததாக வாக்குமூலம்

சென்னையில் கணவரை குழியில் போட்டு மனைவியே மூடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சென்னையை அடுத்த பெரும்பாக்கம் கலைஞர் நகர் 8 வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ். 60 வயதான இவர் ரியல் எஸ்டேட் புரோக்கராக இருந்து வந்தார். கடந்த 17 ஆம் தேதி நாகராஜூக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உயிரிழக்க போவதாகவும், அதனால் தன்னை கொல்லைப்புறத்தில் உள்ள குழியில் புதைத்து விடுமாறு மனைவியிடம் கூறியதாக தெரிகிறது. கணவர் கேட்டுக் கொண்டதன் பேரில் மனைவி லட்சுமியும் அவ்வாறே செய்துள்ளார். இதனிடையே 19ஆம் தேதி வேலைக்கு சென்றுவிட்டு திரும்பிய மகள் தமிழரசி, தந்தை எங்கே என கேட்டதற்கு நடந்ததை தாய் கூறவே அதிர்ந்து போனார் மகள். உடனே பெரும்பாக்கம் போலீசாரிடம் அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரோடு இருந்த நபரை குழியில் போட்டு மூடிய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது... அதேநேரம் இது கொலையா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்