தமிழ்நாடு

கணவனை கொன்று புதைத்த மனைவி... 2வது கணவனை கொன்று, 3வது நபருடன் வாழ்க்கை

கணவனை கொன்று புதைத்த மனைவி... 2வது கணவனை கொன்று, 3வது நபருடன் வாழ்க்கை

தந்தி டிவி

கணவனை கொன்று புதைத்த மனைவி... 2வது கணவனை கொன்று, 3வது நபருடன் வாழ்க்கை

தென்காசியை அருகே இளைஞர் மாயமான விவகாரத்தில், 3 ஆண்டுகளுக்கு பிறகு உடல் தோண்டி எடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.தென்காசி குத்துக்கல்வலசை அண்ணா நகர் பகுதியைச் அபிராமியின் கணவன் தங்கராஜ் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதைத் தொடர்ந்து அபிராமிக்கும், பைக் மெக்கானிக்கான தென்காசியை சேர்ந்த 23 வயது காளிராஜ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் திருமணம் செய்துள்ளனர். பின்னர், அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரை காதலித்த அபிராமி, அவருடன் சேர்ந்து, காளிராஜ் கொன்று புதைத்துள்ளார். இதனிடையே, மகனை காணவில்லை என காளிராஜின் தாயார் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. இதில், முருகேசன் என்பவரின் உதவியுடன், தனது 2 கணவனை 3-வது கணவர் மாரிமுத்து உடன் சேர்ந்து கொன்று புதைத்ததை அபிராமி ஒப்புக்கொண்டார். போலீசார் உள்ளிட்ட அதிகாரிகளின் முன்னிலையில், உடல் தோண்டி எடுக்கப்பட்டது. எலும்புக் கூடு மற்றும் சட்டை மட்டுமே கிடைத்த நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி