தமிழ்நாடு

வெள்ளை புலியை தத்தெடுத்த நடிகர் சிவகார்த்திகேயன் - மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் நன்றி

வெள்ளை புலியை த‌த்தெடுத்த நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் நன்றி தெரிவித்து உள்ளது.

தந்தி டிவி

வெள்ளை புலியை த‌த்தெடுத்த நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் நன்றி தெரிவித்து உள்ளது. சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா நாட்டில் உள்ள உயிரியல் பூங்காக்களில் அதிக அளவு விலங்குகளை கொண்டதாக திகழ்கிறது. இங்கு உள்ள விலங்குகளோடு ஒரு சிறந்த பந்தத்தை உருவாக்கும் விதமாக "விலங்கு தத்தெடுப்பு" திட்டமும் செயல்பட்டு வருகிறது. மக்கள் தங்களுக்கு பிடித்த விலங்குகளுக்கு, உணவு மற்றும் பராமரிப்பு செலவை ஏற்றுக்கொள்வதே இந்த திட்டம். இந்நிலையில், அணு என்ற வெள்ளை புலியை நான்கு மாதங்களுக்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்து உள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனின் இந்த நடவடிக்கைக்கு மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் நன்றி தெரிவித்து உள்ளது.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்