தமிழ்நாடு

மணல் அள்ள விதிக்கபட்டுள்ள தடை நீக்கமா ?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிபந்தனைகளுடன் மணல் அள்ள அனுமதியளிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிபந்தனைகளுடன் மணல் அள்ள அனுமதியளிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் அள்ளவும், மணல் குவாரி நடத்தவும் கடந்த 2013 ஆண்டு நவம்பர் 13ம்தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மணல் அள்ள விதிக்கப்பட்டுள்ள தடை இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், மணல் அள்ள அனுமதி அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரின் கோரிக்கை ஏற்று ஆற்றுப் பகுதியில் அரசு தொகுப்பு வீடுகள், அரசு பணிகள், மற்றும் உள்ளூர் கட்டுமான பணிகளுக்கு மணல் அள்ள நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க அரசு ஆலோசித்து வருவதாக மாவட்ட பொன்னையா சூசகமாக தெரிவித்துள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ