சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் வீரமணிகண்டன் இவரது மனைவி தங்க அரசி ஜன்னல் கதவுகளை திறந்து வைத்துவிட்டு வாட்ஸ்அப்பில் சாட்டிங்கில் மும்மரமாக இருந்துள்ளார். அப்போது கழுத்தில் அணிந்திருந்த நகைகள் 18 சவரன் நகைகளை ஜன்னல் ஓரத்தில் வைத்துவிட்டு முகம் கழுவ சென்று, திரும்பிவந்து பார்த்தபோது நகைகளை காணவில்லை. இதுகுறித்து தமிழரசி அளித்த புகாரின் பேரில் எம்ஜிஆர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.