தமிழ்நாடு

பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பு இவ்வளவா?

தந்தி டிவி

இலங்கையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், நேற்றைய தினம் ராமநாதபுரம் மாவட்டம், களிமண்குண்டு பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, சல்மான் கான் என்பவரிடமிருந்து கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து, அவரை கைது செய்து சுங்கத்துறை அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அந்த தங்கத்தினுடை புகைப்படத்தையும் அதனுடைய மதிப்பையும் சுங்கத்துறையினர் தங்களுடைய எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், தங்கத்தின் மதிப்பு 8 கோடியே 92 லட்ச ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை