தமிழ்நாடு

"போன வருஷம் என்ன நடந்துச்சு.? அதுதான் நடக்கும்.." - பக்தர்கள் போலீசாருடன் வாக்குவாதம்

தந்தி டிவி

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்ல அனுமதிக்க கோரி பக்தர்கள் வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்தள்ளது. இங்கு ஆடி அமாவாசை வழிபாடு கொண்டாடப்பட உள்ள நிலையில், பக்தர்களுக்கு காலை 6:00 மணி முதல் 12 மணி வரை மட்டுமே மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மலை கோவிலுக்கு செல்ல அனுமதி கேட்டு பக்தர்கள் வாக்குவாதம் செய்தனர். மக்களின் பாதுகாப்பு கருதி பேரிடர் மீட்பு குழுவினர் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை