மேற்கு தொடர்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மஞ்சளார் அணைக்கு மேல் உள்ள எலிவால் அருவிக்கு தண்ணீர் வர தொடங்கியுள்ளது. இதனால் அந்த பகுதியே ரம்மியமாக காட்சி அளிக்கிறது, எலிவால் அருவியில் நீர் வர தொடங்கியதால், மஞ்சளார் அணையின் நீர்மட்டம் உயரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்