தமிழ்நாடு

மேட்டூர் அணை இன்று காலை 10 மணிக்கு திறப்பு

மேட்டூர் அணையிலிருந்து, பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

தந்தி டிவி

மேட்டூர் அணையிலிருந்து, பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறந்து விடப்படுகிறது. காலை 10 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்கிறார். கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் காவிரி நீரின் அளவு, விநாடிக்கு, 65 ஆயிரம் கன அடியாக குறைந்து விட்டது. இருந்தபோதிலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105 அடியை தாண்டி உள்ளது. இன்று திறக்கப்படும் தண்ணீர், விரைவில் டெல்டா பகுதியை வந்தடையும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

"மேட்டூர் அணை தண்ணீர் 2 நாட்களில் திருச்சி வந்தடையும்"

மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் 2 நாட்களில் திருச்சி வந்தடையும் என்றும் இதன் மூலம் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள 75 ஏரி, குளங்களில் 2 டி.எம்.சி தண்ணீர் சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்