தமிழ்நாடு

தென்சென்னையில் குடிநீர் விநியோகம் 2 நாட்கள் நிறுத்தம்

தென்சென்னையில் நாளையும் நாளைமறுநாளும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தந்தி டிவி
தென்சென்னையில் நாளையும் நாளைமறுநாளும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை உள்ளது. இங்கு சுத்திகரிக்கப்படும் கடல் நீர், தினசரி தென் சென்னை பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளையும் நாளைமறுநாளும் பராமரிப்பு பணி காரணமாக சுத்திகரிப்பு பணிகள் நிறுத்தப்பட உள்ளன. இதனால் திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, அடையார், வேளச்சேரி, நீலாங்கரை, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும். இதனால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, தேவையான குடிநீரை சேமித்து வைத்து கொள்ள வேண்டும் என்றும் நெம்மேலி குடிநீர் ஆலை அறிவுறுத்தி உள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்