தமிழ்நாடு

குடிநீருக்காக அவதிப்படும் கிராம மக்கள் - ஒரு அடிபம்பை மட்டும் நம்பியுள்ளதாக வேதனை

திருவாரூர் அருகே குடிநீருக்காக அவதிப்படும் கிராம மக்கள் ஒரே ஒரு அடி பம்பை மட்டும் நம்பியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் வேப்பத்தாங்குடி ஊராட்சிக்குட்பட்ட வஞ்சியூர், படுவைக்காடு, மாவூர், வயலுர், பரமாக்குடி உள்ளிட்ட பல கிராம மக்கள்

குடிநீருக்காக அவதிப்பட்டு வருகின்றனர். கோடை காலத்தில் ஒரு குடம் குடிநீருக்காக 2 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளதாகவும், உரிய சாலை வசதி இல்லாததால் தண்ணீர் கொண்டு வர மிகவும் சிரமப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் அப்பகுதியில் குடிநீருக்காக ஒரே ஒரு அடிபம்பை மட்டும் நம்பியிருக்க வேண்டியுள்ளதாகவும், தங்கள் குடிநீர்பிரச்சினையை போக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு