தமிழ்நாடு

குடிநீருக்காக அவதிப்படும் கிராம மக்கள் - ஒரு அடிபம்பை மட்டும் நம்பியுள்ளதாக வேதனை

திருவாரூர் அருகே குடிநீருக்காக அவதிப்படும் கிராம மக்கள் ஒரே ஒரு அடி பம்பை மட்டும் நம்பியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் வேப்பத்தாங்குடி ஊராட்சிக்குட்பட்ட வஞ்சியூர், படுவைக்காடு, மாவூர், வயலுர், பரமாக்குடி உள்ளிட்ட பல கிராம மக்கள்

குடிநீருக்காக அவதிப்பட்டு வருகின்றனர். கோடை காலத்தில் ஒரு குடம் குடிநீருக்காக 2 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளதாகவும், உரிய சாலை வசதி இல்லாததால் தண்ணீர் கொண்டு வர மிகவும் சிரமப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் அப்பகுதியில் குடிநீருக்காக ஒரே ஒரு அடிபம்பை மட்டும் நம்பியிருக்க வேண்டியுள்ளதாகவும், தங்கள் குடிநீர்பிரச்சினையை போக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?