தமிழ்நாடு

"தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் வராது" -நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம்

தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நாடாளுமன்ற மாநிலங்களவையில், திமுக, உறுப்பினர் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்,எழுத்து மூலமாக பதில் அளித்துள்ளார். அதில், அணை பாதுகாப்பு மசோதா மூலம் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் வராது என்று தெரிவித்துள்ளார். அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தான் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். ஒரு மாநிலத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டு வேறு மாநிலத்தில் உள்ள அணைகள், ஏற்கனவே உள்ளது போல், அதிகாரம் உள்ள அந்தந்த மாநிலங்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அணைகளை பாதுகாக்க, மாநில அணை பாதுகாப்பு ஆணையம் செயல்பட்டு வருகிறது, அதற்கு பதில் தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் கொண்டு வரப்பட உள்ளது. இதனாலும் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அந்த பதிலில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை