நீர் நிலைகளை பாதுகாக்க உத்தரவு பிறப்பித்திருந்த உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை நிறைவேற்றாததால் தமிழக தலைமை செயலர், மாநில வருவாய்த்துறை முதன்மை செயலர் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,
இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த தமிழக அரசு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தது.