தமிழ்நாடு

ஓமலூர் அருகே கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு : 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்பு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி பேரூராட்சி பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் மேட்டூரில் இருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

தந்தி டிவி
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி பேரூராட்சி பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் மேட்டூரில் இருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் குடிநீர் வரும் பிரதான குழாய் உடைந்தது. அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு குழாய் பதிக்கும் பணியின் போது இந்தக் குழாய் உடைந்ததால் தண்ணீர் வீணானது. இதனால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உடைந்த குழாயை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை