தமிழ்நாடு

சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் அருகே கீழப்பூங்குடி ஊர்க்காவலன் நொண்டிக்கருப்பர் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு சுற்றிலும் வடத்தால் கட்டப்பட்ட காளையை 25 நிமிடங்களில் 9 வீரர்கள் கொண்ட குழு அடக்க வேண்டும் என விதிமுறை வைக்கப்பட்டது. இதில் சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களை

சேர்ந்த காளைகளும், மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். குறித்த நேரத்திற்குள் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், போட்டியின் போது 2 மாடுபிடி வீரர்கள் காயமடைந்த நிலையில் அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்