தமிழ்நாடு

வாக்கி டாக்கி திருட்டு? - இளைஞரை நொங்கெடுத்த போலீசார் - நீதிமன்றம் அதிரடி

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த தவக்கண்ணன், உயர்நீதிமன்றக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2020ஆம் ஆண்டு பாஸ்போர்ட் விசாரணைக்காக ஏ.முக்குளம் காவல்நிலையம் சென்ற போது, வாக்கி-டாக்கி கானவிவில்லை எனக்கூறி காவலர்கள் தாக்கியதாக கூறியுள்ளார். அவர்கள் மீது உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தனபால், போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி மனுதார‌ர் கோர முடியாது என்றார். இருந்தாலும், மனுதார‌ர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்கள் தீவிரமானவை என்பதால், இதுகுறித்து விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 3 மாத‌த்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி