தமிழ்நாடு

வாக்கி டாக்கி திருட்டு? - இளைஞரை நொங்கெடுத்த போலீசார் - நீதிமன்றம் அதிரடி

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த தவக்கண்ணன், உயர்நீதிமன்றக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2020ஆம் ஆண்டு பாஸ்போர்ட் விசாரணைக்காக ஏ.முக்குளம் காவல்நிலையம் சென்ற போது, வாக்கி-டாக்கி கானவிவில்லை எனக்கூறி காவலர்கள் தாக்கியதாக கூறியுள்ளார். அவர்கள் மீது உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தனபால், போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி மனுதார‌ர் கோர முடியாது என்றார். இருந்தாலும், மனுதார‌ர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்கள் தீவிரமானவை என்பதால், இதுகுறித்து விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 3 மாத‌த்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை