திருச்செங்கோட்டில் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்செங்கோடு தனியா் கல்லூரியில் நாமக்கல் மாவட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பாக வைக்கப்பட்டு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டு வேட்பாளர் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கூறுகையில், 163 சிசிடிவி கேமராக்கள் மற்றும் மூன்றடுக்கு பாதுகாப்புடன் 24 மணி நேர கண்காணிப்பு நடைபெறும் என்று கூறினார்.