தமிழ்நாடு

விருதுநகர் மாவட்ட குடிநீர் தேவைக்கு நீர் திறப்பு - வைகை அணையில் நீர்மட்டம் சரியும் அபாயம்

வைகையில் அணையில் வரத்து குறைந்துள்ள நிலையில் தண்ணீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகையில் அணையில், வரத்து குறைந்துள்ள நிலையில் தண்ணீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தம் 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம் 69 அடியை எட்டிய நிலையில், வினாடிக்கு இரண்டாயிரத்து140 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, நாளை முதல் விருதுநகர் மாவட்ட குடிநீர் தேவைக்காக 600 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது. நீர்மட்டம் 66 அடியாக சரிந்தால், 58 ஆம் கால்வாயில் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்படும். இதனால், ஆண்டிப்பட்டி பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு