தமிழ்நாடு

தகாத உறவை கண்டித்த மாமனார், மாமியாரை கொன்ற மருமகன்

விருதுநகர் அருகே தகாத உறவை கண்டித்த மாமனார், மாமியாரை கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு, தப்பி ஓடிய மருமகன் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

தந்தி டிவி
கீழச்சிம்பூர் கிராமத்தை சேர்ந்த கணேசும், வீரசோழனை கிராமத்தை சேர்ந்த முனீஸ்வரியும், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கணேசுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதை அறிந்த, அவரது மாமனார், மாமியார், மருமகனை கண்டித்துள்ளனர். ஆத்திரம் அடைந்த கணேஷ், அரிவாள் மற்றும் இரும்பு கம்பியால் மாமனார், மாமியாரை தாக்கி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தனிப்படை அமைத்து கொலையாளியை தேடி வந்தனர். இந்நிலையில், பரமக்குடிநகர் காவல்நிலையத்தில் கொலையாளி கணேசன் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி