விருதுநகர் பட்டாசு வெடி விபத்து பாதுகாப்பு விதிமீறல்களும், திமுக அரசின் மெத்தனப் போக்குமே இந்த கோர விபத்துக்கு காரணம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். திமுகவின் ஐந்தாண்டு கால ஆட்சியில் மட்டும் 170-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள அன்புமணி ராமதாஸ், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு 5 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்..