தமிழ்நாடு

பேச்சு மூச்சு இல்லாமல் போன நபர்-கடவுள் போல் வந்து மீண்டும் இதயத்தை துடிக்க விட்ட பெண் -வைரல் வீடியோ

தந்தி டிவி

மார்த்தாண்டம் அருகே சாலையை இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்றவர் மீது பஸ் மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சிராயன்குழி பகுதியில் சாலையோரம் இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென சாலையை கடக்க முயன்றார். அப்போது நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி வந்த அரசு பேருந்து இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கீழே விழுந்து கிடந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக அந்த வழியாக நடந்து சென்றுகொண்டிருந்த பெண் செவிலியர் ஒருவர் ஓடி வந்து முதலுதவி செய்து அவரை காப்பாற்றினார். இதில் அந்த நபர் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பிய நிலையில் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு