மத்திய பிரதேசத்தில் 45 விழுக்காடு எலும்பு பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர் எனக்கூறி, மாற்றுத்திறனாளிக்கான இட ஒதுக்கீட்டில் அரசு வேலை பெற்ற பெண் ஒருவர், நடனம் ஆடும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உஜ்ஜயினில் உள்ள கருவூலத்தில் அதிகாரியாக பணியில் சேர்ந்துள்ள பிரியங்கா கடம் என்பவர் சேர்ந்துள்ளார். ஆனால், எலும்பு ஊனம் உள்ளவர் எப்படி குத்து பாடலுக்கு நடனம் ஆட முடியும் என்று மாணவர் அமைப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.