தமிழ்நாடு

மூதாட்டியிடம் அத்துமீறல்?-குற்றவாளியை பிடிக்க போலீசுக்கு துணையாக சென்றவர் பிணமாக திரும்பிய சோகம்

தந்தி டிவி

கூடலூர் அருகே ஆங்கூர்பாளையத்தை சேர்ந்த 80 வயதாகும் அன்னம்மாள் தோட்டத்தில் கீரை பறிக்கச் சென்றபோது, சாமாண்டிபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் அத்துமீறி நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மயக்கமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை தேடிவந்தனர். இந்நிலையில், சாமாண்டிபுரம் முல்லைப்பெரியாறு பகுதியில் விஜயகுமார் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசாரை அவரை தேடினர். காவல்துறையினருக்கு உதவியாக, சாமாண்டிபுரத்தைச் சேர்ந்த தேவா, முகிலன், அஜித் உள்ளிட்டோரும் தேடினர். முல்லைப் பெரியாற்றில் இறங்கிய தேவா திடீரென மாயமான நிலையில், அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில், தேவாவின் உறவினர்கள், கம்பம்-குமுளி நெடுஞ்சாலையில் போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மாயமான தேவாவுக்கு உமாமகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"