தமிழ்நாடு

மண்ணுக்குள் புதைந்திருந்த 1500 ஆண்டுகள் பழமையான வித்தகர் விநாயகர் கோயில் | Vinayagar | Salem

தந்தி டிவி

சேலம் உத்தமசோழபுரத்தில் குப்பைகள் மூடி மண்ணுக்குள் புதைந்திருந்த விநாயகர் கோயில் மீட்கப்பட்டுள்ளது.

சேலம் உத்தமசோழபுரம் பகுதியில் திருமணிமுத்தாற்றின் ஓரமாக வித்தகர் விநாயகர் கோயில் புதைந்திருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பசுமை தமிழகம் என்ற அமைப்பினர், குப்பைகள் மற்றும் மண்ணை அகற்றி ஒரே பாறையில் விநாயகர் சிலை இரண்டடி சிற்பமாக செதுக்கப்பட்டிருந்த சிலையை மீட்டனர். அங்கு, தூண்களும் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது. தற்போது இதனை சுற்றி வட்டார மக்கள் கூட்டமாக சென்று விநாயகர் சிலையை கண்டு வணங்கி செல்கின்றனர். ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்றும், அவ்வையார் நேரடியாக வருகை தந்து விநாயகர் அகவல் என்ற நூல் எழுதிய இடம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த கோயிலை பாதுகாத்து மக்கள் வழிபடும் தளமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Breaking | TVK | Vijay | தென்தமிழகத்தை குறிவைக்கும் விஜய்? திடீரென வந்தஅதிரடி அப்டேட்

Villupuram Gold | விழுப்புரத்தில் கத்தி முனையில் தங்கம் கொள்ளை - வெளியான திடுக்கிடும் புதிய தகவல்

``தவெக உடன் செல்ல ராகுல் முடிவு.. முன்பே கணித்து அனைத்திற்கும் தயாரான திமுக’’ - நக்கீரன் பிரகாஷ்

DMK Alliance 2026 | Congress``இறங்கி வந்த திமுக; இதையாவது ஏற்குமா காங்கிரஸ்?’’ - விடிவதற்குள் முடிவு

DMK Congress Alliance | "கெடு இல்லை.." - நொடிக்கு நொடி அதிரும் களம்.. கூட்டணியில் நடப்பது என்ன?