தமிழ்நாடு

மண்ணுக்குள் புதைந்திருந்த 1500 ஆண்டுகள் பழமையான வித்தகர் விநாயகர் கோயில் | Vinayagar | Salem

தந்தி டிவி

சேலம் உத்தமசோழபுரத்தில் குப்பைகள் மூடி மண்ணுக்குள் புதைந்திருந்த விநாயகர் கோயில் மீட்கப்பட்டுள்ளது.

சேலம் உத்தமசோழபுரம் பகுதியில் திருமணிமுத்தாற்றின் ஓரமாக வித்தகர் விநாயகர் கோயில் புதைந்திருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பசுமை தமிழகம் என்ற அமைப்பினர், குப்பைகள் மற்றும் மண்ணை அகற்றி ஒரே பாறையில் விநாயகர் சிலை இரண்டடி சிற்பமாக செதுக்கப்பட்டிருந்த சிலையை மீட்டனர். அங்கு, தூண்களும் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது. தற்போது இதனை சுற்றி வட்டார மக்கள் கூட்டமாக சென்று விநாயகர் சிலையை கண்டு வணங்கி செல்கின்றனர். ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்றும், அவ்வையார் நேரடியாக வருகை தந்து விநாயகர் அகவல் என்ற நூல் எழுதிய இடம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த கோயிலை பாதுகாத்து மக்கள் வழிபடும் தளமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

BREAKING || கோவையின் 10 தொகுதி ரிசல்ட்... கடைசி நேரத்தில் பறந்த அதிரடி உத்தரவு

Heavy Rain || நாளை வெளுத்து வாங்கப்போகும் மழை.. தலைகீழாக மாறும் கிளைமேட் - வெளியான அலர்ட்

Vote Counting | ``இன்னும் சற்றுநேரத்தில்’’ என சொன்னதும் வோட் கவுன்டிங் மையம் அருகே திடீர் பரபரப்பு

Madhyapradesh Accident | நாட்டையே நடுங்கவிட்ட விபத்தில் 2 தமிழர்கள் சடலமாக மீட்பு

Madhyapradesh Accident | நாட்டையே நடுங்கவிட்ட விபத்தில் 2 தமிழர்கள் சடலமாக மீட்பு