தமிழ்நாடு

லாட்டரி சீட்டு விற்பனை - 34 வழக்குகள் பதிவு : "குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை"

லாட்டரி சீட்டால் பாதிக்கப்பட்டு 5 பேர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, விழுப்புரத்தில், பிரபல லாட்டரி சீட்டு வியாபாரி கோல்டு சேகர் உள்ளிட்ட 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

நகைத் தொழிலாளி அருண் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட பிறகு, லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இதனையடுத்து உடனடியாக 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பெரிய வியாபாரிகளை பிடிக்காமல் சிறு சிறு வியாபாரிகளை மட்டும் போலீசார் கைது செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், பிரபல லாட்டரி சீட்டு வியாபாரி கோல்டு சேகரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தில் 3 நாட்களில் 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்