தமிழ்நாடு

லாட்டரி சீட்டு விற்பனை - 34 வழக்குகள் பதிவு : "குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை"

லாட்டரி சீட்டால் பாதிக்கப்பட்டு 5 பேர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, விழுப்புரத்தில், பிரபல லாட்டரி சீட்டு வியாபாரி கோல்டு சேகர் உள்ளிட்ட 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

நகைத் தொழிலாளி அருண் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட பிறகு, லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இதனையடுத்து உடனடியாக 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பெரிய வியாபாரிகளை பிடிக்காமல் சிறு சிறு வியாபாரிகளை மட்டும் போலீசார் கைது செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், பிரபல லாட்டரி சீட்டு வியாபாரி கோல்டு சேகரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தில் 3 நாட்களில் 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"