தமிழ்நாடு

மது போதையில் ரவுடி வெட்டி கொலை - உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

விழுப்புரத்தில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

விழுப்புரம் பூந்தோட்ட பகுதியை சேர்ந்த ரவுடி கஜா மீது கொலை மீது உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. தனது நண்பர் லாலி கார்த்திக் வீட்டிற்கு சென்ற கஜா 2 பேருடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கத்தியால் வெட்டப்பட்டு கஜா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கஜாவை கொலை செய்தது யார் என விசாரணை நடத்தி வரும் போலீசார் உடன் மது அருந்திய நண்பர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி