தமிழ்நாடு

தொழிற்சாலையிலிருந்து வெளியான நச்சு புகை... 28 பேர் பாதிப்பு - மருத்துவமனையில் அனுமதி..

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் வேடம்பட்டு பகுதியில் இயங்கி வரும், தனியார் மாற்று எரிசக்தி பொருள் தயாரிக்கும் நிறுவனத்தால், அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக புகார் தெரிவித்து வந்தனர். மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் தீர்வு கிடைக்காததால், நாடாளுமன்ற தேர்தலை மக்கள் புறக்கணித்தனர். இந்நிலையில் தொழிற்சாலையில் இருந்து நெடியுடன் கூடிய துர்நாற்றம் வீசியதால், 28 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 28 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தனியார் நிறுவனத்திற்கு சீல் வைத்து மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. தற்காலிகமாக இல்லாமல் தொழிற்சாலைக்கு நிரந்தரமாக சீல் வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை