தமிழ்நாடு

விழுப்புரம் அருகே இருபிரிவினர் இடையே மோதல்

விழுப்புரம் அருகே இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் மற்றும் சாலை மறியல் காரணமாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கமலகண்ணி அம்மன் ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு பாட்டு கச்சேரி நடைபெற்றது. அப்போது குறிப்பிட்ட பிரிவினர் தொடர்பான பாடல் பாடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு பிரிவினர், கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

பாட்டு கச்சேரி தொடர்ந்த நிலையில், ஆத்திரமடைந்த இளைஞர்கள் சிலர் மற்றொரு பிரிவினர் வசிக்கும் பகுதிக்குள் புகுந்து கல் வீசியும் , மோட்டார் சைக்கிள், கார், வீடு, குடிநீர் தொட்டி உள்ளிட்டவற்றை அடித்தும் சேதப்படுத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு பிரிவினர் செஞ்சி விழுப்புரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.அவர்களை தடியடி நடத்தி போலீசார் விரட்டினர். அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை