தமிழ்நாடு

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - மிரட்டல் விடுத்த நபரை தேடும் போலீசார்...

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது, விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறி இணைப்பை துண்டித்துக் கொண்டார்.

தந்தி டிவி
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதில் பெயர் குறிப்பிடாத மர்மநபர், விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறி இணைப்பை துண்டித்துக் கொண்டார். இதனையடுத்து, விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற சோதனை முடிவில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலை பேசி எண்ணை வைத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். அப்போது விழுப்புரம் மாவட்டம் கூனிமேடு பகுதியை சேர்ந்த புவனேந்திரன் என்பவர், மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. விசாரணையில் புவனேந்திரன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் ஏற்கனவே பலமுறை இது போல் மிரட்டல் விடுத்ததும் தெரியவந்துள்ளது. மிரட்டல் விடுத்த புவனேந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்