தமிழ்நாடு

மர்ம காய்ச்சலால் முடங்கிய கிராமத்தினர்...

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே மர்ம காய்ச்சலால் வீட்டுக்குள்ளேயே முடங்கிய கிராம மக்கள்.

தந்தி டிவி
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே மர்ம காய்ச்சலால், வீட்டுக்குள்ளேயே முடங்கிய கிராம மக்கள், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அழகமாநகரி கிராமத்தில், கடந்த 15 நாட்களாக, 50க்கும் மேற்பட்டோர், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கை, கால், மூட்டு வீக்கம் மற்றும் வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். காய்ச்சல் பரவி வரும் நிலையில், சுகாதார துறையினர் பெயரளவில், மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள கிராம மக்கள், மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வலியுறுத்தியுள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ