தமிழ்நாடு

50 ஆண்டு காலமாக சாலை வசதி இல்லாத கிராமங்கள் - ரூ.13.6 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 50 ஆண்டுகாலமாக சாலை வசதி இல்லாத பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியத்தில் கீழ்வலசை, மேல்வலசை, அக்கரைப்பட்டி, செம்மம்பட்டி, உள்செக்கடி என ஐந்து மலை கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில், கல்வராயன் மலையிலிருந்து நான்கு புள்ளி 6 கிலோமீட்டர் தொலைவிற்கு 13 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை இரு சக்கர வாகனத்தில் சென்றும், 2 புள்ளி 6 கிலோமீட்டர் நடந்தே சென்றும் பணிகளை ஆய்வு செய்தார்.அப்போது அவரை மலைவாழ் மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதைத் தொடர்ந்து, மலைவாழ் மக்களிடம் இருந்து மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று கொண்டார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்