தமிழ்நாடு

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

மேலூர் அருகே நிலத்திற்கு பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் மணிமேகலை கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

மதுரை மாவட்டம் மேலூர் அருகே நிலத்திற்கு பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் மணிமேகலை கைது செய்யப்பட்டுள்ளார். வேப்படப்பு கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆண்டிச்சாமிக்கு பட்டா வழங்க மணிமேகலை ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி,மணிமேகலையின் புரோக்கர் மயில்சாமியிடம் அவர் லஞ்சப் பணத்தை கொடுத்துள்ளார்.பின்னர் அந்த பணத்தை மயில்சாமியிடம் இருந்து மணிமேகலை பெற்றுக்கொண்டதை அடுத்து,மறைந்திருந்த போலீசார் இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு