தமிழ்நாடு

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

மேலூர் அருகே நிலத்திற்கு பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் மணிமேகலை கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

மதுரை மாவட்டம் மேலூர் அருகே நிலத்திற்கு பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் மணிமேகலை கைது செய்யப்பட்டுள்ளார். வேப்படப்பு கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆண்டிச்சாமிக்கு பட்டா வழங்க மணிமேகலை ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி,மணிமேகலையின் புரோக்கர் மயில்சாமியிடம் அவர் லஞ்சப் பணத்தை கொடுத்துள்ளார்.பின்னர் அந்த பணத்தை மயில்சாமியிடம் இருந்து மணிமேகலை பெற்றுக்கொண்டதை அடுத்து,மறைந்திருந்த போலீசார் இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா