தமிழ்நாடு

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

மேலூர் அருகே நிலத்திற்கு பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் மணிமேகலை கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

மதுரை மாவட்டம் மேலூர் அருகே நிலத்திற்கு பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் மணிமேகலை கைது செய்யப்பட்டுள்ளார். வேப்படப்பு கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆண்டிச்சாமிக்கு பட்டா வழங்க மணிமேகலை ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி,மணிமேகலையின் புரோக்கர் மயில்சாமியிடம் அவர் லஞ்சப் பணத்தை கொடுத்துள்ளார்.பின்னர் அந்த பணத்தை மயில்சாமியிடம் இருந்து மணிமேகலை பெற்றுக்கொண்டதை அடுத்து,மறைந்திருந்த போலீசார் இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்