யோகா மற்றும் இசை, நாடகம் உள்ளிட்ட அனைத்து கலைகளும் சமுதாய சிந்தனையுடன் மக்களுக்கு நற்கருத்துகளை தருவதற்காகவே படைக்கப்பட்டதாக, காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராஜ நகரில் நடைபெற்ற இயல், இசை, நாடக விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், இவ்வாறு கூறினார். ஸ்ரீ தியாக பிரம்ம ஞான சபாவின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இசை, நாடகம் மற்றும் நடனத்தில் சிறந்த ஆளுமைகளுக்கு, விஜயேந்திரர், "வாணி கலா சுதாகர" விருதுகளை வழங்கி கவுரவித்தார்.