தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், சில வாரங்களுக்கு முன் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார். சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய நிலையில், அவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான டயாலிசிஸ் சிகிச்சைக்காகவே மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.