தமிழகத்தின் இரண்டாவது நிலை மருத்துவ தலைநகராக கோவையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி அருகே கோலார்பட்டி அரசு மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சை பிரிவுகளை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 3 வாரத்தில் தொடங்கும் என குறிப்பிட்டார்.