மதுக்கடைகளுக்கு செக் வைக்கும் முதல்வர் விஜய்யின் அடுத்தக் கட்ட நடவடிக்கை? தமிழகத்தில் கல்வி கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளைக் கணக்கெடுக்கும் பணி தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் புதிய முதலமைச்சர் விஜய்யின் உத்தரவின் பேரில், விதிமுறைக்கு மாறாக இயங்கும் மதுபானக் கடைகளை கண்டறிந்து அவற்றை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் செய்தி மதுப்பிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.