சென்னையில் அம்பேத்கர் குறித்த நூலினை, த.வெ.க தலைவர் விஜய் இன்று வெளியிடுகிறார்.
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. அம்பேத்கர் பேரன் உள்ளிட்டோர் பங்கேற்கும் இவ்விழாவில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கலந்துகொண்டு, நூலினை வெளியிடுகிறார். த.வெ.க கட்சி தொடங்கி முதல் மாநாடு நடைபெற்ற நிலையில், முதன்முறையாக பொது நிகழ்வில் விஜய் பங்கேற்க உள்ளார். அரசியல் காரணங்களுக்காக இந்நிகழ்வில் கலந்துகொள்ளப்போவதில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ள நிலையில், விஜய் பங்கேற்று அம்பேத்கர் நூலினை வெளியிடும் நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.