முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து, நடிகர் விஜய் சேதுபதி முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்திற்கு சென்ற விஜய் சேதுபதி, அங்கு வைக்கப்பட்டிருந்த முதலமைச்சரின் தாயார் தவுசியம்மாள் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.