முதல்வர் விஜய் தரப்பின் வீடியோ கான்ஃபரன்ஸ் மனு தள்ளுபடி முதல்வர் விஜய் தரப்பின் வீடியோ கான்பரன்ஸ் மனு தள்ளுபடி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் முதலமைச்சர் விஜயின் மனைவி சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி கோரி இரு தரப்பினரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில், முதலமைச்சர் விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மெயில் ஐடி குறிப்பிடப்படாததால், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் சரியான மெயில் ஐடி வழங்கப்படும் என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அடுத்த மனுவில் மெயில் ஐடியை தெளிவாக குறிப்பிடுமாறு நீதிபதி அறிவுறுத்தினார். அதேவேளையில், சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வீடியோ கான்ஃபரன்ஸ் மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. தொடர்ந்து வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்...