தமிழ்நாடு

நினைவு அறக்கட்டளை பெயரில் ரூ.2000 கோடி மோசடி - ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டோர் புகார்

நினைவு அறக்கட்டளை பெயரில் ரூ.2000 கோடி மோசடி செய்த நபர் மீது ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டோர் புகார் அளித்தனர்.

தந்தி டிவி
வெளிநாட்டில் இருந்து தங்களது அறக்கட்டளைக்கு பணம் வருவதாக கூறி, 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த நபர் மீது ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டோர் புகார் அளித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் ரவிச்சந்திரன் என்பவர் தலைமையில் இயங்கிவரும் சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளையின் பெயரில் விளம்பரம் வெளியானது. அதில், தங்களது அறக்கட்டளையில் முதலீடு செய்தவர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக கூறி, பணம் பெற்றுக் கொண்டவர்களின் படங்களை வெளியிட்டிருந்தனர். இதை பார்த்த, ஏற்கனவே அறக்கட்டளையில் பணம் கொடுத்து ஏமாந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கருணாமூர்த்தி, சகுந்தலா, சுதா, ஆனந்தன் ஆகிய நால்வரும் புகாரளித்தனர். அதில், அறக்கட்டளை பெயரில்மோசடி நடப்பதாக குற்றம்சாட்டினர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி